2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் (கிரீன் கார்டு) இன்று அக்டோபர் 5, 2022 முதல் விண்ணப்பங்களுக்குத் திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
பொதுவாக "கிரீன் கார்டு" என்று அழைக்கப்படும் இது இன்று இரவு 09.30 முதல் விண்ணப்பிக்க முடியும்.
பன்முகத்தன்மை விசா திட்டம் 2024 க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 8, 2022 இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
https://dvprogram.state.gov என்ற அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும், பன்முகத்தன்மை விசா திட்டம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட நபர்களை அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகின்றது.
#DV2024 Diversity Visa Program is open from Oct 5 (9:30 PM Sri Lankan time) to Nov 8, 2022 (10:30 PM Sri Lankan time). https://t.co/nelIqX6nqV is the ONLY way to enter and all processing is electronic. No paper entries allowed. #ConsularWednesday pic.twitter.com/2zQikmlg51
— U.S. Embassy Colombo (@USEmbSL) October 5, 2022