தேஹிவல மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உணவுக்கான செலவை ஈட்ட முடியவில்லை


 தேஹிவல மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உணவுக்கான செலவை ஈட்ட முடியவில்லை என்று இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.


 கொரோனா பரவல்  காரணமாக மிருகக்காட்சிசாலைகள் மூடப்பட்டுள்ளதால் வருமான இழப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்


 தேஹிவல மிருகக்காட்சிசாலை மட்டுமல்ல, நாட்டின் அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.


 இந்த நிலைமையை சீர் செய்ய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் மிருகக்காட்சிசாலைகள் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.