புகையிரத கட்டணங்களை அதிகரிக்க அனுமதி.


 சீசன் டிக்கெட் முறை ரத்து: புகையிரத திணைக்களத்தில் இந்திய முதலீடு.



 புகையிரத திணைக்களம் அதிகார சபையாக மாற்றப்பட்ட  பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள பருவச் சீட்டு முறையை அல்லது சீசன் டிக்கெட் முறை ரத்து செய்யப்படும் என 'அருணா' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும், புகையிரத கட்டணமும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகையிரத திணைக்களம் அதிகார சபையாக மாற்றப்பட்ட பின்னர் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்படி, தற்போதைய குறைந்தபட்ச புகையிரதக் கட்டணமான 20 ரூபாவில் இருந்து ஏனைய அனைத்துக் கட்டணங்களையும்  பஸ் கட்டணத்திற்கு இணையாக அல்லது அதற்கு இணையான வீதத்தால் உயர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு முன்மொழிந்துள்ளது.


புகையிரத தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலில் அதிகாரிகள் இந்த முன்மொழிவுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.


பருவச் சீட்டு முறையை இல்லாதொழிப்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற முடியும் எனவும், அந்த வருமானத்தில் இருந்து ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியும் எனவும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஏறக்குறைய 19,000 ஊழியர்களைக் கொண்ட புகையிரத திணைக்களத்திற்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களத்திற்குக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதும் இதற்காக  பணம் ஒதுக்கீடு செய்யுமாறு பொது திறைசேரி தெரிவித்துள்ளமையே  இந்த முன்மொழிவுகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றும் முன்மொழிவுடன், முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் புகையிரத திணைக்களத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



දුම්රිය සීසන් ක්‍රමය අහෝසි වන ලකුණු: දුම්රිය සඳහා ඉන්දීය  ආයෝජනය.


දුම්රිය දෙපාර්තමේන්තුව අධිකාරියක් කිරීමෙන් පසු දැනට ක්‍රියාත්මක වන වාර ප්‍රවේශ පත්‍ර හෙවත් සීසන් ක්‍රමය අහෝසි වන බව 'සති අග අරුණ' පුවත්පත වාර්තා කර තිබේ.


එසේම දුම්රිය ගාස්තු ද ඉහළ යන බව එහි සඳහන්ය.


දුම්රිය දෙපාර්තමේන්තුව අධිකාරියක් කිරීමෙන් පසු මෙම ප්‍රතිසංස්කරණ සිදු කිරීමට ප්‍රවාහන අමාත්‍යාංශයේ අවධානය යොමු ව ඇති බව වාර්තා වේ.


ඒ අනුව දැනට රුපියල් විස්සක් වන අවම දුම්රිය ගාස්තුවේ සිට සෙසු සියලු ගාස්තු, බස් ගාස්තු හා සමාන ව හෝ ඊට ආසන්න ප්‍රතිශතයකින් ඉහළ නැංවීමට ප්‍රවාහන අමාත්‍යාංශය යෝජනා කර ඇත. 


දුම්රිය වෘත්තීය සමිති සමඟ පැවති සාකච්ඡාවක දී බලධාරින් විසින් මෙම යෝජනා ඉදිරිපත් කළ බව වාර්තා වේ.


වාර ප්‍රවේශ පත්‍ර ක්‍රමය අහෝසි කිරීමෙන් විශාල ආදායමක් ලද හැකි බවත් එම ආදායමෙන් සේවක වැටුප් ගෙවිය හැකි බවත් මෙම සාකච්ඡාවේ දී අවධාරණයට ලක් ව ඇත.


19,000කට ආසන්න සේවක පිරිසක් සිටින දුම්රිය දෙපාර්තමේන්තුවට වැටුප් හා දීමනා ලබා දීමට දුම්රිය දෙපාර්තමේන්තුව ලබන ආදායම ප්‍රමාණවත් නොවීමත් ඒ සඳහා මුදල් වෙන් කිරීම මහා භාණ්ඩාගාරය දැනුම් දී තිබීමත් මෙම යෝජනා සඳහා හේතු වී ඇති බව සඳහන්ය.


දුම්රිය දෙපාර්තමේන්තුව අධිකාරියක් කිරීමේ යෝජනාවත් සමඟ ඉන්දීය ප්‍රධාන පෙළේ සමාගම් නියෝජිතයන් දුම්රිය සඳහා ආයෝජනය කිරීමට කැමැත්ත පළ කර ඇති බව ද වාර්තා වී තිබේ.


ඒ සඳහා නවීන තාක්ෂණය සහිත දුම්රිය එන්ජින් සහ මැදිරි ගෙන්වීමට ද යෝජනා වී ඇති බව සඳහන් වේ.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎