இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய சபையிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அதற்க்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தேசிய சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
தேசிய சபையின் அடுத்த கூட்டம் நாளை (06) நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கபீர் ஹாசிம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.