மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு பிணை இல்லை...


குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் புதிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


 வாகன ஓட்டிகளின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் குடிபோதையில் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.


மது மட்டுமின்றி போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் கண்டறிய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.


இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மது அருந்தப்பட்டதா என்பது மாத்திரமே கண்டறியப்பட்ட நிலையில் புதிய திட்டத்தின் கீழ்  மதுபானம் மற்றும் 06 வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும்.


முன்னதாக வாகன ஓட்டிகளின் சிறுநீர் மாதிரிகள் ஒரு மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் பரிசோதிக்கப்பட்டன.


ஆனால் இன்று முதல் பொலிஸாரின் நேரடித் தலையீட்டில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.


இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான உபகரணகள் தற்போது காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


இன்று இது முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


முதலில் மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎