காணாமல் போன பதினான்கு வயதுடைய பாடசாலை மாணவிக்கு நடந்த கதி..



   மன்னாரில் காணாமல் போன பதினான்கு வயதுடைய பாடசாலை மாணவி புத்தளத்தில் வைத்து நேற்று (19) பாலாவியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


மன்னார், முசலி - பண்டாரவெளி பிரதேசத்தில் வசித்து வந்த முசலி பாடசாலையில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் இந்த மாணவி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் மன்னார் சிலாவத்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்ததையடுத்து, புத்தளத்தில் வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்க முடிந்த நிலையில், மன்னாருக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


போலீசார் நடத்திய விசாரணையில், அவர் என்ன காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினார் என்பது தெரியவில்லை.


சம்பவம் தொடர்பில் மன்னார் சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎