அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன் போராட்டம்.


நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்ம்.


எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


மருத்துவர்களுக்கு வழங்கப்படும் முப்பத்தைந்தாயிரம் கொடுப்பானவை அவர்களுக்கு வழங்கி பொருளாதார நீதியை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.


இது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை எனவும் கூட்டமைப்பு கூறுகிறது.


வேலை நிறுத்தம் காரணமாக நோய்வாய்ப்பட்ட மக்கள் படும் துன்பங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என அவர்கள் மேலும் வலியுறுத்துகின்றனர்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎