சந்திரிக்கா


புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுக்கும் முன்னாள் ஜனாதிபதி.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை.


இதனால் புதிய கூட்டணி அமைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


புதிய கூட்டணியில் சேர இதுவரை 5 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.


ஐக்கிய மக்கள் முன்னணியின் நாற்காலி அடையாளத்துடன் புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


ஆரம்பத்தில், புதிய கூட்டணியை வழிநடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை அது தொடர்பில் உறுதியான வார்த்தைகளை அவர் வெளியிடவில்லை.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎