கடனை அடைக்க முடியாமல் 200 பெண்கள் தற்கொலை


நிபந்தனையின்றி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு சம்மதம்.-காமினி வலேபொட


பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தாலும் நிபந்தனையின்றி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு சம்மதிப்பதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.


இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் 


அவரால் எதிர்வரும் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் போட்டியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி கட்சி நாட்டை நேசிக்கும் மற்றும் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை எதிர்க்கும் கட்சி என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இங்கு தெரிவித்தார்.


எவ்வாறாயினும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எதிர்வரும் தேர்தலுக்கு தேசிய மக்கள் சக்தியுடன் இணையுமா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட மேலும் தெரிவித்தார்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎