நாளை முதல் 10 ஆம் திகதி  வரை மின்வெட்டு குறித்து அறிவிப்பு..


 இன்றைய தினம் மாத்திரம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


 நொரோச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது  மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 நாளை முதல் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதையும் படிக்கலாம்:

முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானத்தால் லங்கா சதொச நிறுவனத்திற்கு சுமார் 600 கோடி ரூபா நட்டம்..