பல அரசு நிறுவனங்கள்  தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்


 அரச ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.


 அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என  சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர்  வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் கருத்து    தெரிவிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவும் பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில்  கருத்து தெரிவித்த அவர், ஒரு இராஜாங்க  அமைச்சருக்கு மாதம் 25 லட்சம் ரூபாய் செலவாகிறது என தெரிவித்தார்.


 எவ்வாறாயினும், அரச ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில தரப்பினர் இவ்வாறு கருத்து வெளியிடுவது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 வருவாய் ஈட்டும் அரசு நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்க நிதி அமைச்சகம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை, அதன்படி, வங்கிகள், துறைமுகங்கள், புகையிரத மற்றும்  போக்குவரத்து சபை  போன்ற அரசு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அவர்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் சம்பளம் வழங்குகின்றன.  எவ்வாறாயினும், அரசாங்க ஊழியர்களுக்கு திட்டமிட்டபடி சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.


இதையும் படிக்கலாம்:

செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8% ஆக அதிகரிப்பு..