நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைப் பாராட்டுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது
உலக வங்கியின் இலங்கை பணிப்பாளர் திரு. FARIS HADAD-ZERVOS சர்வர்ஸ் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ஷெஹான் சேமசிங்க ஆகியோருடன் இன்று (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதாக திரு. FARIS HADAD-ZERVOS குறிப்பிட்டுள்ளார்.
திரு. FARIS HADAD-ZERVOS உலக வங்கி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Author's Recommendation:
எதிர்வரும் வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு..