இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது – ஜனாதிபதி - Kandy Time News

Breaking

𝖐𝖆𝖓𝖉𝖞 𝖙𝖎𝖒𝖊 𝖓𝖊𝖜𝖘  
Kandy Time News

Wednesday 15 November 2023

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது – ஜனாதிபதி

 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது – ஜனாதிபதி


இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது – ஜனாதிபதி


இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாதெனவும், அதற்கு தீர்வு காணும் வகையில் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்திய பின்னர் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் வலுவான பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் இன்று (15) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மாற்றம் காணும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுவதன் ஊடாக சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அந்த முறைமை மிகவும் அவசியமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


புதிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,


நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சூழலை உருவாக்கும் வகையில், இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது காஸா எல்லை பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளை பாதிக்கக் கூடும் என்பதால் வரவு செலவு திட்டத்தின் சாதக தன்மைகள் மாறக்கூடும்.


அதனாலேயே உலக பலவான்களுடன் இணைந்து காஸா எல்லை பகுதியில் நடைபெறும் மோதல்களை தடுக்க முற்படுவதாகவும், மத்திய கிழக்கின் செயற்பாடுகள் இலங்கையில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


கடந்த வருடத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொருளாதாரத்தை மீண்டும் நிலைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அதன் பின்னரே பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். நான் முன்வைத்த முதலாவது வரவு செலவு திட்டத்தில் பொருளாதார நிலைப்படுத்தலுக்கான யோசனைகளை முன்வைத்திருந்தேன், தற்போதைய வரவு செலவு திட்டத்தில் பொருளாதார மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைத்துள்ளேன். ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


தேர்தலை இலக்கு வைத்தே இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். அது உண்மையல்ல. இம்முறை வரவு செலவுத் திட்டம் புதிய பொருளாதாரத்திற்கான பிரவேசத்தை ஏற்படுத்தல், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரித்தல், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சிகளை வலுவூட்டல் உட்பட அனைத்துத் துறைகளையும் உள்வாங்கியதாக அமைந்துள்ளது. சிறந்த அரச சேவைக்கு சம்பள அதிகரிப்பு அவசியமாகும். புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக வரவு செலவுத் திட்டத்தில் அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளோம்.


இலங்கையின் மிகப்பெரிய தனியார் மயப்படுத்தலை இந்த வரவு செலவுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. இரண்டு மில்லியன் அளவிலானோரை காணி உரிமையாளர்களாக மாற்றியுள்ளது.


அதேபோல் பசுமை வலுசக்தி தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதால், இலங்கையின் பசுமைப் பொருளாதாரத் துறையை முன்னேற்றம் அடையச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.


அதேபோல் உலர் வலயத்தில் விவசாயத்தை நவீனமயப்படுத்தல் மற்றும் மீன்பிடித்துறையை விரிவுபடுத்தல் திட்டங்களுடன், சுற்றுலாத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை அறிந்துகொண்டு சுற்றுலா பயணிகள் வருகையை 05 மில்லியனாக அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


உற்பத்தி போட்டித் தன்மையை ஏற்றுக்கொண்டு, இந்தியா மற்றும் பிராந்தியத்தின் விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP), தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ASEAN), ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆகியவற்றுடன் தொடர்புகளை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன.


பங்களாதேஷ் போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுடன் போட்டியிடுவதற்கு காணப்படும் சவால்களை அறிந்துகொண்டு, எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, அதற்கு அவசியமான சூழலையும் தற்போதைய வரவு செலவுத் திட்டம் உருவாக்கியுள்ளது. அதேபோல் பொருளாதார மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க தகுந்த வகையில் கல்வித் திட்டத்திலும் மாற்றம் செய்ய வேண்டும்.


இதன்போது, தனியார் துறைக்காக புதிய தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் உள்ள ஐஐடி (IIT) பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கான புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, திருகோணமலையின் பிரதான துறைமுகம் மற்றும் மேலும் சாத்தியமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி இலங்கையை ஒரு அபிவிருத்தி மையமாக முன்னேற்றுவதன் மூலம் பிராந்திய சேவைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய எதிர்பார்த்துள்ளோம். 2030-2035 காலப் பகுதிக்குள் நவீன பொருளாதார இலக்குகளை அடைவதற்கு தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்வதை இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.


வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை வெற்றி கொள்ளவும், பொருளாதார முன்னேற்றத்திற்காக நாட்டை கட்டியெழுப்பவும் தனியார் துறை, வெளிநாட்டு உதவி மற்றும் ஓய்வுபெற்ற தொழில் வல்லுநர்கள் ஆகியோருடனான ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு இல்லாமல், அரசாங்கம் மாத்திரம் செய்யக்கூடிய பணிகள் குறைவாகவே உள்ளன.


நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, உலக வங்கியின் உள்நாட்டுப் பிரதிநிதி சியோ கந்தா, மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் குலேந்திரன் சிவராம், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமால் தேவரதந்திரி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திர ஆகியோர் உட்பட நிபுணர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



ශ්‍රී ලංකාවේ ආර්ථික අර්බුදය එක් අයවැයක් තුළින් විසඳිය නොහැකියි – ජනපති


ශ්‍රී ලංකාවේ ආර්ථික අර්බුදය එක අයවැයක් තුළින් විසඳිය නොහැකි බවත් අර්බුදය අනුව විසඳුම් සෙවීමේ මාර්ග වෙනස් කළ යුතු බවත් ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා ප්‍රකාශ කළේය.


පළමුව රටේ ආර්ථිකය ස්ථාවර කිරීම සඳහා වූ වැඩපිළිවෙළ ක්‍රියාත්මක කර පසුව ආර්ථික ප්‍රතිසංස්කරණ සිදුකිරීම මඟින් ශක්තිමත් ආර්ථිකයක් ගොඩනැගිය හැකි බව ද ජනාධිපතිවරයා පෙන්වා දුන්නේය.


ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා මෙම අදහස් පළ කළේ, ෂැංග්‍රිලා හෝටලයේ දී අද (15) පැවැති කොළඹ විශ්වවිද්‍යාලයේ ව්‍යාපාර පරිපාලන පශ්චාත් උපාධිධාරී ආදි විද්‍යාර්ථයින්ගේ සංගමය විසින් සංවිධාන කළ ‘2024 අයවැය කතිකාවත‘ අමතමින්ය.


වෙනස්වන පරිසරය තුළ වෙනස් වීම මඟින් අර්බුදයට සාර්ථක විසඳුම් සොයා ගත හැකි බවත් ශ්‍රී ලංකාවේ ආර්ථිකය ගොඩනැංවීමේදී ද එම ක්‍රමවේදය ඉතාම වැදගත් බවත් ජනාධිපතිවරයා මෙහිදී පෙන්වා දුන්නේය.


නව සමාජය ගොඩනැගීමේ පියවරක් ලෙස අස්වැසුම ප්‍රතිලාභ වෙනුවෙන් වෙන්කළ මුදල තුන් ගුණයකින් වැඩි කිරීමට පියවර ගත් බවද ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා පැවසීය.


එහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වූ ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා මෙසේ ද පැවසීය,


රට මුහුණ පා ඇති ආර්ථික අර්බුදයෙන් මිදීම සඳහා පසුබිම සකස් කරමින් මෙවර අය වැය ඉදිරිපත් කර තිබෙනවා. එහි තිබෙන ඇස්තමේන්තු බාහිර සාධක මත වෙනස් විය හැකියි. මක්නිසාදයත් වර්තමානයේ ගාසා තීරයේ පවතින ගැටුම් තත්ත්වය පවා ඉදිරියේදී මෙරට ආර්ථිකයට බලපෑ හැකියි. එම තත්ත්වය ශ්‍රී ලංකාවට පමණක් නොවෙයි ලෝකයේ සියළු රටවල්වලට බලපානවා. ලෝක බලවතුන් එකතු වී ගාසා තීරයේ සටන් විරාමයක් ඇති කිරීමට උත්සාහ ගන්නේ ද ඒ නිසයි. මැදපෙරදිග සිදුවන දේවල් ශ්‍රී ලංකාවේ ආර්ථිකයටද බලපෑම් කළ හැකියි.


පසුගිය වසරේදි ශ්‍රී ලංකාවේ ඇති වූ ආර්ථික අර්බුදයට පිළියමක් වශයෙන් ආර්ථිකය නැවත ස්ථාවර කිරීමට සැලසුම් කළ යුතුයි. ඉන්පසුව ආර්ථික ප්‍රතිසංස්කරණ සිදු කළ යුතුයි. මා මේ වනවිට අයවැය වාර්තා දෙකක් ඉදිරිපත් කර තිබෙනවා. එහි පළමු අයවැය යෝජනාවලියේදී ආර්ථිකය ස්ථාවර කර ගැනීම සඳහා වන යෝජනා ඉදිරිපත් කළා. මෙවර අයවැය යෝජනාවලියෙන් ආර්ථික ප්‍රතිසංස්කරණ සිදු කිරීමට යෝජනා ඉදිරිත් කර තිබෙනවා. එක අයවැයකින් මේ රටේ ආර්ථික අර්බුදයට විසඳුම් ලබා දිය නොහැකියි.


මෙවර අයවැය මැතිවරණ ඉලක්ක කර ගෙන ඉදිරිපත් කළ අයවැයක් බව ඇතැම් පාර්ශව ප්‍රකාශ කරනවා. නමුත් මෙම අයවැය මැතිවරණ අයවැයක් නොවෙයි. මෙවර අයවැය නව ආර්ථික ප්‍රවේශයක් ඇති කිරීම සඳහා ඉදිරිපත් කළ අයවැයක් වශයෙන් රාජ්‍ය සේවක වැටුප් වැඩිකිරිම, පෞද්ගලික අංශයේ ගැලපීම්, අස්වැසුම වැනි සමාජ සුබසාධක වැඩසටහන් මෙන්ම කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසායකයන් යන සෑම ක්ෂේත්‍රයක්ම ආවරණය කර තිබෙනවා. ගුණාත්මක රාජ්‍ය සේවාවක් සඳහා වැටුප් වැඩිකිරීම අවශ්‍ය වෙනවා. නව සමාජය ගොඩනැගීමේ පියවරක් ලෙස අයවැය මඟින් අස්වැසුම සමාජ සුබසාධක ප්‍රතිලාභ වෙනුවෙන් වෙන් කළ මුදල තුන්ගුණයකින් වැඩි කිරිමට යෝජනා කර තිබෙනවා.


ශ්‍රී ලංකාවේ සිදුවන විශාලතම පෞද්ගලිකකරණය මේ අය වැයෙන් යෝජනා කර තිබෙනවා. අක්කර මිලියන දෙකක පමණ ප්‍රමාණයක් බලපත්‍ර ලාභී ඉඩම් හිමියන් බවට පත් කරනවා.


ඒ වගේම හරිත බලශක්තිය කෙරෙහි අවධානය යොමු කර තිබෙනවා. හරිත ආර්ථිකය සඳහා කැපවන ශ්‍රී ලංකාව එම ක්ෂේත්‍රයේ පෙරමුණ ගැනීමට පසුබිම සකස් කිරිමට අවශ්‍ය කරන යෝජනා මෙවර අයවැයෙන් ඉදිරිපත් කර තිබෙනවා.


විශේෂයෙන් වියළි කලාපයේ කෘෂිකර්මාන්තය නවීකරණය කිරීම සහ ධීවර කර්මාන්තය ව්‍යාප්ත කිරීම පිළිබඳ සැලසුම් ද මෙම අයවැයට ඇතුළත් වෙනවා. සංචාරක ව්‍යාපාරය ප්‍රවර්ධනය සඳහා පවතින අවස්ථාවන් හඳුනාගෙන ඇති අතර, සංචාරකයින් මිලියන 5ක් ආකර්ශනය කර ගැනීමට ද යෝජනා ඉදිරිපත් කර තිබෙනවා.


නිෂ්පාදනයේ තරගකාරිත්වයේ අවශ්‍යතාවය පිළිගනිමින් ඉන්දියාව, කලාපීය විස්තීරණ ආර්ථික හවුල්කාරිත්වය (RCEP), අග්නිදිග ආසියානු ජාතීන්ගේ සංගමය (ASEAN) සහ යුරෝපා සංගමය (EU) සමඟ සම්බන්ධවීම වෙනුවෙන් ද සාකච්ඡා කිරිමට බලාපොරොත්තු වෙනවා. බංගලාදේශය සහ නැගී එන ආර්ථිකයන් සහිත රටවල් සමඟ තරග කිරීමේ අභියෝග හඳුනා ගෙන ඉදිරි ක්‍රියාමාර්ග සැලසුම් කළ යුතුයි. ඒ සඳහා අවශ්‍ය පසුබිම මෙවර අයවැය මඟින් සකස් කර තිබෙනවා. ඒ වගේම ආර්ථික වෙනස්වීම්වලට මුහුණ දිය හැකි අයුරින් අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ද සිදු කළ යුතුයි.


එහිදී පෞද්ගලික අංශය සඳහා පෞද්ගලික නව විශ්වවිද්‍යාල ඇති කිරීමට යෝජනා කර තිබෙනවා. ඉන්දියාවේ චෙන්නයි නගරයේ පිහිටි අයි අයි ටී (IIT) විශ්වවිද්‍යාලයේ මඟපෙන්වීම යටතේ මහනුවර නගරයේ නව තාක්ෂණ විශ්වවිද්‍යාලයක් පිහිටුවීමට යෝජනා කර තිබෙනවා. දේශගුණික විපර්යාස සඳහා නව විශ්වවිද්‍යාලයක් ආරම්භ කිරීමටත් බලාපොරොත්තු වෙනවා.


විශේෂයෙන්ම ත්‍රිකුණාමලයේ ප්‍රධාන වරාය සහ විභව සංවර්ධන කටයුතු කෙරෙහි අවධානය යොමු කරමින් ශ්‍රී ලංකාව කේන්ද්‍රස්ථානයක් ලෙස සංවර්ධනය කිරීම තුළින් කලාපීය සේවා සැපයුම් සඳහා ඇති හැකියාව සොයා බැලීමට බලාපොරොත්තු වෙනවා. 2030-2035 වන විට නවීන ආර්ථිකයක් කරා ළඟා වීමට අවශ්‍ය ආර්ථික ප්‍රතිසංස්කරණ සිදු කිරීමට මෙවරය අයවැය මඟින් අප ඉලක්ක කර තිබෙනවා.


අයවැය යෝජනා ක්‍රියාත්මක කිරීමේ අභියෝග ජය ගැනීමට සහ රට ආර්ථික ප්‍රගතිය වෙනුවෙන් බලමුළු ගැන්වීම සඳහා පුද්ගලික අංශය, විදේශ ආධාර සහ විශ්‍රාමික වෘත්තිකයන් සමඟ සහයෝගයෙන් කටයුතු කිරීම දිරිමත් කළ යුතුයි. එවැනි කැපවීමකින් තොරව රජය පමණක් සිදු කළ හැකි කාර්ය භාරය සීමාසහිතයි.


මුදල් අමාත්‍යාංශ ලේකම් මහින්ද සිරිවර්ධන, මහ බැංකු අධිපති ආචාර්ය නන්දලාල් වීරසිංහ, ලෝක බැංකුවේ දේශිය නියෝජිත චියෝ කන්ද, මහ බැංකුවේ හිටපු නියෝජ්‍ය අධිපති ආචාර්ය ඩබ්ලිව්.ඒ. විජේවර්ධන, කොළඹ විශ්වවිද්‍යාලයේ ව්‍යාපාර පරිපාලන පශ්චාත් උපාධිධාරී ආදි විද්‍යාර්ථයින්ගේ සංගමයේ සභාපති කුලේන්ද්‍රන් සිවරාම්, ස්ටෑන්ඩර්ඩ් වරලත් බැංකුව ප්‍රධාන විධායක නිලධාරී බිංගුමාල් තේවරතන්ත්‍රී, ජෝන් කීල්ස් හෝල්ඩිංග්ස් සභපති ක්‍රිෂාන් බාලේන්ද්‍ර යන මහත්ම මහත්මීහු ඇතුළු විද්වත් පිරිසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎



Kandy Time News

எங்களுடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி... நம்பகத்தன்மையுடன் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
Kandy Time News