இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி கட்டணங்களை உயர்த்த தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான 2.5% வரி வசூலிப்பதால் கட்டணத்தை திருத்தியமைப்பதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கட்டணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்தந்த தொலைபேசி நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.