எரிபொருள் விலையில் மாற்றம்..

 

 எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையை திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.


 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது, அதன்படி, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் திருத்தம் செய்யப்பட்டது.


எவ்வாறாயினும், கடந்த ஜூன் மாதம் முதல், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிவைக் காட்டி வருகின்ற போதிலும்,  எரிபொருளின் விலையில் குறிப்பிடத்தக்க திருத்தம் எதுவும் இடம்பெறவில்லை.


  பெற்றோல் மற்றும் டீசல் 125 ரூபாக்கு வழங்க முடியும் என நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.


இதையும் படிக்கலாம்:

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் குறைவாக விநியோகம் செய்தால் இதுதான் கதி...