நொரோச்சோலை மீண்டும்  தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு..


 நிலக்கரி கொள்வனவுக்கான குறுகிய கால தேவைகளுக்கான டெண்டர் கோருவது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


 இதன்படி நிலக்கரி கொள்வனவுக்கான குறுகிய கால தேவைக்கான டெண்டர்கள் சர்வதேச போட்டி விலைக்கு ஏற்ப நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


 மேலும், இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட மற்றும் பதிவு செய்யப்படாத எந்தவொரு தரப்பினரும் இந்த விநியோகத்தில் பங்கேற்க முடியும் என்றும் குறைந்தபட்சம் 180 நாட்களுக்கு கடன் காலத்துடன் விநியோகத்தை முடிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவிக்கிறார்.


 மேலும், நீண்ட கால டெண்டரும் வரும் வாரத்தில் வழங்கப்படும் என அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்கலாம்:

இப்படியே வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஏழைகள் நிலை என்னவாகும்? உலக நாடுகளை எச்சரிக்கும் WTO

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் செயலிழப்பு.